விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி அடுத்துள்ள, குடமுருட்டி பகுதியில் இயங்கிவரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இன்று உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, பள்ளி மாணவர்களுக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் மரக்கன்றுகளை வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ரோட்டரி சங்க உறுப்பினர் ராஜேஷ்குமார், மக்கள் நலப் பணியாளர் தாமஸ், ஒரேதேசம் அறக்கட்டளை தலைவர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகி மனோவிக்ரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.