கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு சமூக வலைதளங்களில் கையாள வேண்டிய யுக்திகளுக்கான பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டமானது, கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. குமரகுரு தலைமையில் திருக்கோவிலூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறை ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு கழக இணைச்செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் கழக தொழில்நுட்ப பிரிவு வி. எல். அருள் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் தேர்தல் காலங்களில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் சமூக வலது கையாள வேண்டிய யுக்தியில் என்னென்ன என்றும் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மாலதி உட்பட விழுப்புரம், கடலூர் மண்டல நிர்வாகிகள் மற்றும் , நகரச் செயலாளர், ஒன்றிய கழக செயலாளர் என 1500 க்கு மேற்பட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.