விநாயகர் ஊர்வலம்.. குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

50பார்த்தது
விநாயகர் ஊர்வலம்.. குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை திருச்செந்தூர் கடற்கரையில் கரைப்பதற்காக ஊர்வலமாக மக்கள் இன்று எடுத்துச் சென்றனர். அப்போது காயல்பட்டிணம் வழியாக அவர்கள் ஊர்வலம் சென்ற போது, விநாயகர் சிலைகளுடன் வந்த இந்து மக்களுக்கு காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் ஜெய்னுலாப்தீன், அமமுக நகர செயலாளர் யாசீன், மாணவர் இயக்கம் நிறுவனர் ஆசிரியர் மீரா சாகிப் ஆகியோர் குளிர்பானங்களை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி