நடுக்குப்பம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா

57பார்த்தது
நடுக்குப்பம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா
மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது. நடுக்குப்பம் கிராமத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே திரவுபதி அம்மன் கோவில் பிரச்னை தொடர்பாக அந்த பகுதியில் அடிக்கடி மோதல் இருந்து வந்தது. இதனால் இந்த பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்தால் இரு பிரிவினர்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கலாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், நடுக்குப்பத்தில் புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை எஸ். பி. , தீபக் சிவாச் திறந்து வைத்தார். ஏ. டி. எஸ். பி. , திருமால், டி. எஸ். பி. , சுனில், தாசில்தார் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி