திண்டிவனம் அருகே விவசாயி தற்கொலை போலீசார் விசாரணை

84பார்த்தது
திண்டிவனம் அருகே விவசாயி தற்கொலை போலீசார் விசாரணை
திண்டிவனம் வட்டம், சாத்தனூா், ஏரிக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ம. அருணாச்சலம் (55, விவசாயி. இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவதியுற்று வந்த அருணாச்சலம் கடந்த 2-ஆம் தேதி வீட்டில் விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி