அண்ணனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த தம்பி

2621பார்த்தது
திண்டிவனம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். அவரது தம்பி மணிகண்டன். குமரேசன் நேற்று முன்தினம் இரவு  தனது தம்பி மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து நபர்களுடன் அதே பகுதியில் இரவு மது அருந்தியுள்ளார். அப்போது குமரேசனுக்கும், அவரது தம்பி மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு  கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த தம்பி மணிகண்டன், அண்ணன் குமரேசனை அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமரேசன் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டனுடன் மது அருந்தியவர்கள் குமரேசனை மீட்டு அருகிலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டி. எஸ். பி சுரேஷ் பாண்டியன் மற்றும் ரோஷணை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை, தம்பியே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மணிகண்டனை ரோஷணை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி