அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்த மாஜி

55பார்த்தது
திண்டிவனத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னால் சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார்.

கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழக முழுவதும் கோடை வெப்பத்தால் தவிக்கும் பொதுமக்களின் நலன் கருதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நீர், மோர் பந்தலை திறந்து வருகின்றனர்.

இதேபோல் திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. திண்டிவனம் ஆர். எஸ். பிள்ளை வீதி சந்திப்பு, செஞ்சி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர், மோர் பந்தலை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் திறந்து வைத்தார். நீர், மோர் பந்தலில் இளநீர், நுங்கு, வெள்ளேரி பிஞ்சு, தர்ப்பூசணி, குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி