அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

78பார்த்தது
திண்டிவனம் அடுத்த ரோசனை பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அறிவுலக சட்ட மாமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நன்னாளில் திண்டிவனம் ரோசனையில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட திமுகழக முன்னாள் மாவட்ட துணை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான திண்டிவனம் K. அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது
வழக்கறிஞர்கள் மோகனசுந்தரம், ஞானமூர்த்தி மற்றும் ஸ்டீபன் ராஜ், அப்துல் அலீம், பிரபாகரன், ஆளவந்தார் மற்றும் திராவிட கழக சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும், அடிப்படை கட்டமைப்புகளையும் பாதுகாக்க உறுதி ஏற்றனர்.

தொடர்புடைய செய்தி