தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

61பார்த்தது
திண்டிவனம் ராஜாங்குளத்தில் தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் திண்டிவனம் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி கிராமப்புற மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டிவனம் ராஜாங்குளத்தில் திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில் முருகையன், பிரேம்குமார் உள்ளிட்ட தீயணைப்பு பேரிடர் மீட்பு படை வீரர்கள் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கம் அதாவது, மழைக்காலத்தின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்று வது? ஏரி உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தால் அங்குள்ள மக்களை எப்படி மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது? ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் முறைகள் மற்றும் பலத்த காற்றின் போது சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் வழிமுறைகள் ஆகியவை குறித்து கிராம மக்கள், தன்னார்வலர்களுக்கு செயல் முறை விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி