பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு

1935பார்த்தது
திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரிதாசிடம் பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திமுக நிர்வாகிகள்.

விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி, திண்டிவனம் சட்டமன்ற (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் துரை ரவிக்குமாரை ஆதரித்து திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் முன்னாள் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பரணிதரன் ஏற்பாட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரிதாஸின் வீட்டிற்கு சென்ற திமுக நிர்வாகிகள் பானை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ரமணன், இளைஞரணி துணை அமைப்பாளர் டி. கே. பி ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சீனி சின்னசாமி, முன்னாள் துணைச் செயலாளர் வழக்கறிஞர் அசோகன், மாவட்ட பிரதிநிதி வி. எஸ். முருகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேச பெருமாள், ஜெயராஜ், கவுன்சிலர்கள் எம். டி. பாபு, சரவணன், நகரப் பொருளாளர் சின்னா ராஜேந்திரன், நகரத் துணைச் செயலாளர் ஓவியர் கௌதமன் மற்றும் குணசேகரன், எல். ஐ. சி. ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி