மின் கசிவு காரணமாக கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

68பார்த்தது
மின் கசிவு காரணமாக கரும்பு தோட்டம் எரிந்து நாசம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன், (35); விவசாயி. இவரது கரும்பு தோட்டம் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி