குச்சி ஐஸ் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்

50பார்த்தது
இந்திய நாட்டை நம்ப வைத்து ஏமாற்றும் மோடிக்கு இதோ குச்சி ஐஸ் என மோடிக்கு குச்சி ஐஸ் கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில் தீவனூர், கொள்ளார், வேம்பூண்டி, இரட்டணை வெங்கந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் பரப்புரை மேற்கொண்டார். வெங்கந்தூரில் வேட்பாளருக்கும், அமைச்சருக்கும் ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிய அமைச்சர் மஸ்தான் ஐஸ் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியை அருகில் அடைத்து அங்கிருந்த பொது மக்களுக்கு குச்சி ஐசினை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை பார்த்து உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன் என்று, இந்திய நாட்டை நம்ப வைத்து ஏமாற்றும் மோடிக்கு இதோ குச்சி ஐஸ் என அங்கிருந்த முதியவரின் வாயில் குச்சி ஐஸ்சை வைத்தார்.

தொடர்புடைய செய்தி