மண் சரிந்து விழுந்து 3 பழங்குடியின பெண்கள் பலி

61பார்த்தது
மண் சரிந்து விழுந்து 3 பழங்குடியின பெண்கள் பலி
ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சீங்பூம் மாவட்டத்திற்கு உட்பட்ட மடியயானா கிராமத்தில், தங்களது வீடுகளை பூசுவதற்காக பெண்கள் மண்ணை தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் மண்ணுக்குள் புதைந்து 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி