வீடியோ: கார் இடித்து தூக்கி எறியப்பட்ட மூவர்... துடிதுடித்து பலி

63பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு ஊழியர் ஏற்படுத்திய கார் விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நியூ டெஹ்ரி மாவட்டத்தின் தலைநகரான பௌராடியில் பிளாக் டெவலப்மென்ட் அலுவலர்(பிடிஓ) தேவிபிரசாத் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் மின்னல் வேகத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் மற்றும் 2 சிறுமிகள் மீது மோதியது. இதையடுத்து, தூக்கி எறியப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான தேவிபிரசாத்தை போலீசார் கைது செய்தனர். விபத்து குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி