அரசு பேருந்தில் செருப்பைக்கொண்டு தாக்கிக்கொண்ட பயணிகள்

53பார்த்தது
அரசு பேருந்தில் செருப்பைக்கொண்டு தாக்கிக்கொண்ட பயணிகள்
தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது.தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்த இருவர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு நபர்களுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் தங்களது செருப்பை கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு அருவருக்கத்தக்க வார்த்தைகளில் சண்டையிட்டுக் கொண்டதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி