இங்கிலாந்து அணிக்கு எதிராக இதே ஆட்டம் தொடரும்

80பார்த்தது
இங்கிலாந்து அணிக்கு எதிராக இதே ஆட்டம் தொடரும்
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியபிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மனம் திருப்தியாக உள்ளது. ஆஸ்திரேலியா என்ன மாதிரியான அச்சுறுத்தலை கொடுக்கும் என்று நன்றாக அறிவோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பிட்ச் மற்றும் சூழலை சரியாக பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் அரையிறுதி சுற்றை பொறுத்தவரை இதுவரை எப்படி விளையாடி வருகிறோமோ, அப்படிதான் விளையாடுவோம். ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூடுதலாக புரிந்து கொள்வோம். இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடப் போவது நன்றாக இருக்கும்’’ என்றார்.

தொடர்புடைய செய்தி