நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். அவர்கள் பதவி ஏற்கும் போது, பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக்கொண்டார். இது போன்ற சிறுபான்மையினர்கள், பட்டியலினத்தவர்களை அவமதிப்பு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பேசியபோது, அவருக்கு பாஜக எம்.பி.,கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.