தனியார் மருத்துவமனை நர்சிடம் செல்போன் பறிப்பு வாலிபர் கைது!

52பார்த்தது
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் உரமனாவை சேர்ந்தவர் அன்சி வர்க்கீஸ் (24). இவர் வேலூரில் உள்ள விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ந் தேதி அன்சி வர்க்கீஸ் வேலை முடிந்து மாலையில் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வேலூர்-ஆற்காடு சாலை எல். ஐ. சி. அலுவலகம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென அவர் கையில் வைத்திருந்த கைப்பையை பறித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன். திருடன். என்று சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வருவதற்குள் வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றார். அந்த கைப்பையில் செல்போன். அடையாள அட்டை, பான்கார்டு உள்ளிட்டவை இருந்தன.

இதுகுறித்து அன்சி வர்க்கீஸ் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் காட்பாடி தாலுகா பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த வேலு மகள் சந்தோஷ் (வயது 27) அன்சி வர்க்கிரின் கைப்பையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, செல்போன், அடையாள அட்டை, பான்கார்டை ஆகியவற்றை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி