வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட 28வது வார்டில் உள்ள சைதாப்பேட்டை சர்க்கார் மண்டி தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுத்து சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.