சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் தனக்கு எந்தவொரு சங்கடமும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பேசுகையில், "அதிமுக சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்து கொள்ளப்படுவதில்லை. பேரவையின் மாண்பு, கண்ணியத்தை அப்பாவு காக்கவில்லை" என்றார்.