சாலையில் மழைநீரோடு கலந்து தேங்கிய கழிவுநீர்

54பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காப்புரம், காட்பாடி, பெருமுகை, சாய்நாதபுரம், அடுக்கம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை வேளையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. காட்பாடியில் பெய்த மழையால் கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பியது. பின்னர் கழிவுநீர் மழைநீரோடு கலந்து சாலையில் தேங்கியது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி