குடியாத்தம்: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!

68பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அணங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் கட்டிட தொழிலாளி விஜயகுமார் (29), திருமணமாகாதவர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.

பின்னர் இதனை கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி