காவல்துறை எண் 100-ல் மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்தவர் கைது

55பார்த்தது
வேலூர் அடுத்த பாகாயம் பகுதியில் உள்ள சிஎம்சி மனநல மருத்துவமனை மற்றும் பாகாயம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், வெடிகுண்டு மாலை 5 மணிக்கு வெடிக்கும் எனவும் காவல்துறை உதவி எண் 100-க்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் செல்போன் எண்ணை டிராக் செய்து, அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பதும், அவர் வேலூரில் இருந்ததும் தெரிந்தது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "சந்தோஷ் குமார் சற்று மனநலம் பாதித்த நிலையில் பாகாயம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனநல ஆலோசனைக்காக இன்று பேருந்தில் அவரது தம்பி தமிழ்ச்செல்வனுடன் வேலூருக்கு வந்த போது, தனது தம்பியின் செல்போனை வாங்கி, பாகாயம் காவல் நிலையத்திற்கும், சிகிச்சை பெற வந்த சி. எம். சி மனநல மருத்துவமனைக்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. " பின்பு சந்தோஷ்குமரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி