வாணியம்பாடி: கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

73பார்த்தது
வாணியம்பாடி: கஞ்சா கடத்திய 3 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது ரயில் நிலையம் செல்லும் சாலையில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் அருகே பழையூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் (34), நாயக்கனேரி அருகே படவட்டான் பகுதியைச் சேர்ந்த நவீன் (22) மற்றும் 18 வயது சிறுவன் என்பதும், இவர்கள் ஒடிசாவில் இருந்து ஒரு லாரியில் கஞ்சா கடத்தி வந்து, விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி