திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நமது தேசிய கட்சி நிறுவனத் தலைவர் லட்சுமிபதி தலைமையில் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வலியுறுத்தியும், அதேபோல் உள் இடஒதுக்கீடு 6% உயர்த்தி வழங்கிடவும் மேலும் 3 சதவீதம் உள் ஒதுக்கீட்டை பாதுகாத்திட வலியுறுத்தியும் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய கோரிக்கைகளாக கோவில் மானிய நிலங்களை அருந்ததியர் மக்களுக்கு விவசாயம் செய்ய குத்தகை கொடுக்க வேண்டும், சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அரசு வேலைவாய்ப்பில் அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அருந்ததியர் மக்கள் வசிக்கின்ற வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், அருந்ததியர் இட ஒதுக்கீட்டின்படி சட்டமன்ற, பாராளுமன்ற, ஊராட்சி மன்ற தொகுதிகள் உருவாக்கிட வேண்டும் என்பன அடங்கும். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.