படவேட்டு எல்லையம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

570பார்த்தது
குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கணபதி பூஜை நவகிரக ஹோமங்கள் ஸ்ரீ லட்சுமி பூஜை உடன் துவங்கிய விழாவை தொடர்ந்து இன்று மங்களஇசையுடன் திருமுறை பாராயணங்கள் நான்காம் காலயாக சாலை பூஜை மற்றும் ஹோமங்கள் சங்கல்பம் உள்ளிட்டவை நடைபெற்றது.

மேலும் புனித நீர் கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்து கோவில் கோபுர கலசத்தின் மேல் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி