ராமர் கோவில் திறப்புக்கு கூட காங்கிரஸ் வரவில்லை

70பார்த்தது
ராமர் கோவில் திறப்புக்கு கூட காங்கிரஸ் வரவில்லை
சத்திஸ்கரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார். வாக்கு வங்கியைப் பற்றித்தான் காங்கிரஸ் கவலைப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராம் லல்லாவின் பிரதிஷ்டைக்குக் கூட வரவில்லை. வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அனைவருடைய சொத்துக்களும் கணக்கெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் வளங்கள் மீதான உரிமை முழுவதும் சிறுபான்மையினருகே, பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு இல்லை என மன்மோகன் சிங் கூறியிருந்தார் என அமித் ஷா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி