மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தர்ணா

54பார்த்தது
*திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரில் காவல் துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி தர்ணாவில் ஈடுபட்ட உறவினர்கள். அப்போது மயக்கம் அடைந்து விழுந்த பெண்ணை சிகிச்சைக்காக தன்னுடைய வாகனத்திலேயே அழைத்துச் சென்ற நகர காவல் ஆய்வாளர். *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு ஔவை நகர் பகுதியில் உயிரிழந்த வாலிபர் பழனிவேல் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாய் செல்வி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் அருள் மகன் சந்துரு ஆறுமுகம் மகன் மோகன் ஆகிய இருவரையும் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் இறந்த வாலிபர் பழனிவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது.

தன்னுடைய மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வில்லை அவனை அடித்து கொன்று இருக்கிறார்கள் காவல்துறை முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் ஒருதலை பட்சமாக காவல்துறை செயல் படுகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில் பெற்றோர் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி