அரக்கோணம் அருகே முதியவர் பிணம் கண்டெடுப்பு!

59பார்த்தது
அரக்கோணம் அருகே முதியவர் பிணம் கண்டெடுப்பு!
அரக்கோணம் ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருவலாங்காடு -மணவூர் ரயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் இருப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் விைரந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி