10 டன் குட்கா கடத்தல்.. முக்கிய குற்றவாளி கைது

72பார்த்தது
சென்னை பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த கண்டைனர் லாரியை நிறுத்தினர். அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 10 டன் குட்கா கடத்திச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, ஓட்டுநர் விக்னேஷை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த கனகலிங்கம் இதற்கு மூளையாக இருந்தது தெரியவந்தது. தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி