மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!

55பார்த்தது
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியை சேர்ந்த பெயிண்டர் சாந்தகுமார் (45). இவரது மனைவி பரிமளா. சாந்தகுமார் கடந்த 9-ந் தேதி மதுரையில் கட்டிட பணியின் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினா் முன் வந்தனா். அதன்பேரில் அவருடைய கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. மூளைச்சாவு அடைந்த சாந்தகுமாரின் உடல் அரக்கோணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

உடல் உறுப்புகள் தானம் செய்தவா்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற அரசு உத்தரவுப்படி, அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் ஸ்ரீதேவி, டவுன் கிராம நிர்வாக அலுவலர் லட்சமி நாராயணன் ஆகியோர் சாந்தகுமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி