ராணிப்பேட்டையில் கையுந்துப்பந்து, ஓட்டப்பந்தய போட்டி!

63பார்த்தது
ராணிப்பேட்டையில் கையுந்துப்பந்து, ஓட்டப்பந்தய போட்டி!
மேயர் தயான் சந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பில் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) வாலாஜா வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கேலோ இந்தியா கையுந்துப்பந்து பயிற்சி மையத்தில் கையுந்துப்பந்து போட்டி மற்றும் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப் பட உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் 19 வயதிற்கு உட்பட் டோர், 25 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கையுந்துப்பந்து போட்டி மற்றும் 100 மீட்டர் ஓட்டப்போட்டியிலும், 45 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் கலந்து கொள்ளலாம்.

நேரில் பதிவு செய்து கொள்ளலாம் காலை 7 மணிக்கு போட்டிகள் நடைபெறும். இப்போட்டியில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டி அன்று காலை 6 மணிக்குள் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கையுந்துபந்து பயிற்சி மையத் தில் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி