திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு!

61பார்த்தது
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே பெரிய பரவக்கல் கிராமம் பனந்தோப்பை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுரேஷ் (40). இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். குடும்ப தகராறில் மனைவி அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

மனைவி பிரிந்து சென்றதால் சுரேஷ் தனது வயதான தாயார் கிருஷ்ணவேணியின் பாதுகாப்பில் இருந்து, கிடைக்கும் கூலி வேலையை செய்து சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் பேரணாம்பட்டில் ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள டீக்கடைக்கு அருகில் அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி