ஆட்சியர், அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய சகோதரிகள்

84பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் தமிழக அரசின் "ஊரக பகுதிகளில் மக்களுடன் முல்வர்" நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென கதறி அழுதவாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அவர்களின் காலில் விழுந்து கண்ணீர் வடித்தபடி கதறினார். அவருடன் வந்திருந்தவர்களும் அழுதவாறு மனு அளித்தனர். இதில் ஒருவர் மயங்கி விழுந்ததில் 108 ஆம்புலென்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அது முடிந்தவுடன் சற்று நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து தங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும்படி கண்ணீர் விட்டு கதறி அழுதனர் அது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

அரசு நிகழ்ச்சி ஒன்றில் அடுத்தடுத்து பெண்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி