மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் - துரைமுருகன் பேட்டி!

58பார்த்தது
வேலூரில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் என்று எங்களுக்கு சொன்னவர் அண்ணா. அண்ணா முதலமைச்சரானவுடன் மூன்று கொள்கைகளை அறிவித்தார்.

ஒன்று தமிழ்நாடு என பெயரிட்டார். இரண்டாவது இரு மொழிக் கொள்கைதான். தமிழ் பிளஸ் ஆங்கிலம். மூன்றாவது கொள்கை சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார். மூன்று கொள்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த மூன்று கொள்கைகளையும் மாற்றுகிற சக்தி எந்த கொம்பனுக்கும் கிடையாது என அப்போதே சொன்னார் அண்ணா. வேற்று மொழி வந்தால் தாய்மொழி அழியும் என்பது எங்களின் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள், "என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி