பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 12) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு மையங்களில் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தொலைதூர பயண வசதிக்காக டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கப்படுகிறது. இதன் மூலம் கடைசி நேர நெருக்கடி, காத்திருப்பு காலம் என்பது குறைக்கப்படும்.