புரோக்கர்களுடன் தொடர்பு: பாலியல் தொழில் தடுப்பு போலீசார் மாற்றம்

81பார்த்தது
புரோக்கர்களுடன் தொடர்பு: பாலியல் தொழில் தடுப்பு போலீசார் மாற்றம்
திருச்சியில் விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக அண்மையில் எழுந்த புகாரில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் தங்களிடம் மாமூல் வாங்கிய ஏழு போலீசாரின் பெயர்களை எழுதி வைத்திருந்தனர். இதில் சம்மந்தப்பட்ட காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி