கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற பிரபல ரவுடி கைது!

75பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டரந்தாங்கல் காலனியை சேர்ந்தவர் சரவணன் என்கிற கரடி சரவணன் (வயது 37). இவர் மீது கொலை மிரட்டல், வழிப்பறி , திருட்டு என காட்பாடி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை காட்பாடியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்பாடி ரயில் நிலைய கவுண்டர் பின்புறம் நின்று கொண்டு இருந்தார். அங்கு வந்த கரடி சரவணன் முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். முதியவர் கத்தி கூச்சிலிட்டதால் பயந்து போன சரவணன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து முதியவர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் கேமராவில் பதிவான காட்சிகளில் முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டியது கரடி சரவணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கரடி சரவணனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி