வேலூரில் அதிரடியாக 97 காவலர்கள் பணியிட மாற்றம்

59பார்த்தது
வேலூர் மாவட்டம்

*வேலூர் மாவட்டத்தில் 97 காவலர்கள் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்து வேலூர் மாவட்ட எஸ். பி உத்தரவு*


வேலூர் மாவட்டத்தில், வேலூர் வடக்கு வேலூர் தெற்கு சத்துவாச்சாரி குடியாத்தம் பேராணாம்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் 37 காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 97 காவலர்களை அதிரடியாக வேலூர் மாவட்டத்திற்கு உள்ளாகவே வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவு பிறபித்து இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு பிறகு வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி