நாக்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் உட்பட இருவர் பலி

58பார்த்தது
நாக்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் உட்பட இருவர் பலி
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் ரயில் நிலையத்தில் நேற்று (அக் 07) அதிகாலை 3.30 மணியளவில் ரயிலுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஜெயராம் ராமாவதார் கேவட் (35) என்ற நபர் 6 முதல் 7 நபர்களை கட்டையால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார்(40) என்பவர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி