36 விலையுயர்ந்த செல்போன்களும், ரூ. 76,000 பணமும் கொள்ளை

66பார்த்தது
36 விலையுயர்ந்த செல்போன்களும், ரூ. 76,000 பணமும் கொள்ளை
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகில் உள்ள அவளூரை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று (அக். 7) காலை கடையை திறக்க பிரகாஷ் வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பல ஆயிரம் மதிப்புள்ள 36 செல்போன்களும், ரூ. 76,000 ரொக்கமும் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி