சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த கனகராஜ் - சத்யபிரியா தம்பதியரின் மகன் நவீன், தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் பயிலும் ஷஸ்மித் என்ற 5 வயது சிறுவனிடம், பேருந்தில் சென்றபோது, நவீன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தட்டிக்கேட்க ஷஸ்மித்தின் தந்தை முத்து, அவரின் சகோதரர் வினோத்துடன் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத் பட்டாக்கத்தியால் தாக்கியதில் கனகராஜ் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.