தார் சாலையை காணவில்லை!.. போஸ்டரால் பரபரப்பு

71பார்த்தது
தார் சாலையை காணவில்லை!.. போஸ்டரால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரத்திலிருந்து தட்டார் மடம் செல்லும் வழியில் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.18,67,000 மதிப்பீட்டில் இணைப்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலையைத் தற்போது காணவில்லை எனவும், அதனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரொக்கப் பணமும், ஒரு சவரன் தங்க மோதிரமும் ஊர் மக்கள் சார்பில் வழங்கப்படும் எனவும் தட்டார்மடம், நடுவக்குறிச்சி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி