வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச் 14) நடந்த ஆட்டு சந்தையில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் ரூ.16 லட்சத்திற்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.