தங்கம் விலை இன்று (மார்ச் 14) காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.65,840க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ரூ.8,230க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,300க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.66,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இனி ஒன்றும் செய்ய முடியாது என தங்கம் விலை உயர்வை நினைத்து மக்கள் புலம்பி வருகின்றனர்.