தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே சி வீ

552பார்த்தது
*நம்ம தலையிலேயே மொளகா அரைச்சு நம்மகிட்ட இருந்து வாங்கி நமக்கே திரும்ப மகளிர் உரிமை தொகை கொடுத்து மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை விட்டு குடும்பத்தை பிரித்து விட்டார்கள் இதுதான் திராவிடம் மாடல் என ஸ்டாலின் மீது முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி கடும் விமர்சனம். *

திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் பகுதிகளான அக்ராவரம், புதுப்பேட்டை, வெலக்கல்நத்தம், புள்ளானேரி, ஓட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளையன் தலைமையில் பிரசாரம் நடைப்பெற்றது.

அப்போது அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை பெண்கள் கோலாட்டம் ஆடி மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி

மகளிர் உரிமை தொகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்கவே அந்த திட்டத்தை செயல்படுத்தினார் எனவும்

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் அமைச்சர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகை 2500 வாங்கி பயன் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி