புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ல் மக்கள் பயன்படுத்தும் நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து 15 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரணை கிராம மக்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து வேக்கைவயல் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.