மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்கள் கைது

78பார்த்தது
காட்பாடி ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் சார்பில் கூறப்படுவதாவது;
*மோட்டார் சைக்கிள்கள் திருட்டு*
காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஒட்டி வந்தனர். அவர்கள் மூன்று பேரும் சந்தேகப்படும் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் திருடிய மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் ஜமுனாமரத்தூர் வள்ளியூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 25), கோவிந்தராஜ் (28), விஜயகாந்த் (26) என தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் ஒரு மோட்டார் சைக்கிளையும் காட்பாடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
*3 வாலிபர்கள் கைது*
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய மூன்று வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you