குரூப் 1 தேர்வு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

77பார்த்தது
குரூப் 1 தேர்வு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு ஒன்றுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நிர்வாக உதவியாளர் முத்தையா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நல அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நல அலுவலர் சீதா, உதவி ஆணையர் முருகன், டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலர் அருண் பிரசாத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி