முரசொலி செல்வம் இன்று (அக்.10) இயற்கை எய்திய நிலையில் அவரது உடல் கோபாலபுரத்து இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜக பிரமுகர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக பிரமுகர்களுக்கு ஆறுதல் கூறி சென்றனர்.